ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பைய்யா சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பைய்யா சுவாமிகள் சுமார் 1800 ஆண்டுகளின் துவக்கத்தில் வசதி மிக்க மிராசுதார் குடும்பத்தில் அந்தணர் குலத்தில் பிறந்தவரான சுவாமிகளின் வயதையோ, வருடத்தையோ எவராலும் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் அந்தணர் குலத்தில் பிறந்தவரான சுவாமிகள் சிறுவயது முதற்கொண்டே ஆழ்ந்த பக்தியிலும், ஆழமான ஆன்மீகப் பாதையிலும் தன் சிந்தனையை செலுத்தி வந்தவரான சுவாமிகள் சதாசர்வ காலமும் சிந்தனையிலும், மௌனத்திலும் இருந்து வந்தவர் திடீரென்று ஒரு நாள் மறைந்து போனார்கள். சுவாமிகளின் வீட்டிலிருந்தவர்கள் பல இடங்களிலும் தேடித் திரிந்து இறுதியில் சுவாமிகளின் சுய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்ல ஜோதிடர் வெங்கிடு சுப்பைய்யா மிகப்பெரிய மகான் என்றும் அவரை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.
தவசீலர்:-
🌼🍂🌼🍂
ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் வட இந்தியப் பகுதியை நோக்கிச் சென்று அப்பகுதிகளில் உள்ள சித்தர்களிடம் தஞ்சமடைந்து அவர்களிடம் தியானம், தவம்,யோகம், சித்தாடல்கள் இவற்றையெல்லாம் கற்றறிந்தபின் 30 ஆண்டுகள் கழிந்த பின் சுவாமிகள் ஜாதி- மதம்,இனம்,மொழி,சைவம்,அசைவம் என்று எதிலும் வேற்றுமை பாராமல் அனைத்தும் கடந்த நிலையில் மிகப்பெரிய துறவியாகவும்,மகானாகவும் மாறிய நிலையில் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு வந்தடைந்தார்கள்.
சித்தாடல்கள்:-
🌻🌻🌻🌻🌻🌻
இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து பல்வேறு விதமான சித்து விளையாடல்களையும் சுவாமிகள் புரிந்து வந்துள்ளார்கள்.
தன்னை நாடி வந்தவர்களின் நோய் நொடிகளைத் தீர்க்க 'மந்திரமானதும்,மேன்மை மிக்கதுமான திருநீற்றினையே மருந்தாக வழங்கி வந்தார்கள். அதன் மூலம் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்து வந்தார்கள்
தீர்க்க தரிசியான சுவாமிகள் அப்போது காய்ந்து வறண்டு போயிருந்த பூமியான பட்டுக்கோட்டை பின்னர் புண்ணிய நதியான காவிரி கரைபுரண்டு ஓடி பாலையாக இருந்த இடமெல்லாம் சோலையாக மாறும் என்று அருள்வாக்கு கூறியருளினார்கள்.
நவபாஷாணம்:-
🌺🍀🌺🍀🌺🍀🌺
ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் தமது சீடரான மாணிக்க முதலியாரது நாட்டு மருந்துக் கடையில் நவபாஷாணக் கட்டிகளை வாங்கி அப்படியே சாப்பிடுவாராம். ஆனால் சுவாமிகளுக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று கூறுகின்றனர்.
சுவாமிகளின் மருத்துவ சீடரான கோவிந்த கோனாரைத் தன்னுடன் ககன மார்க்கமாக அதாவது ஆகாய மார்க்கமாக ராமேஸ்வரம் அழைத்துச் சென்று அங்குள்ள பல்வேறு பகுதிகளைத் தரிசனம் செய்ய வைத்து பல்வேறு சித்துக்களும் புரிந்துள்ளார்கள்.
மேலும் சுவாமிகள் நடுவழிக் கொல்லையில் தனது சீடரான கோபாலக் கோனார் குடும்பத்தினரிடம் ஒரு களிமண் உருண்டையைக் கொடுத்து அதனைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பூஜித்து வருமாறு கூறியுள்ளார்கள்.அக்குடும்பத்தினருள் எவருக்கேனும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் உடனே அக்களிமண் உருண்டையிலிருந்து சிறிதளவு எடுத்து நீரில் கரைத்துக் குடிக்க அந்நோய் நீங்குகிறதாம்.இன்றும் அக்குடும்பத்தினரைப் பெரிதாக எவ்விதநோயும் தாக்குவதில்லையாம்
மேலும் ஊரில் ஒருவருக்கு ஜன்னி நோய் கண்டு இறக்கும் தருவாயில் இருந்தவருக்கு சுவாமிகள் தமது திருக்கரங்களால் நோயாளிக்குத் தயிரை ஊற்றிக் கொடுத்துக் காப்பாற்றி உள்ளார்கள்.
காய்ந்த மீனால் குன்மம் தீர்த்தவர்:-
🦈🦈🦈🦈🦈🦈🦈
ஒரு முறை பட்டுக்கோட்டை நகரத்துத் தாசில்தாரைக் 'குன்ம நோய்' அதாவது கடுமையான வயிற்று வலி தாக்க சுவாமிகளைத் தேடி ஓடி வந்தார். தாசில்தாரைக் கண்ட சுவாமிகள் ஓடத் தொடங்கினார்கள். இருவரும் ஓடி இறுதியில் சுவாமிகள் மீன் மார்க்கெட்டை அடைந்து அங்கு ஒரு கருவாட்டுக் கூடையில் இருந்த கருவாட்டுத் துண்டு ஒன்றை எடுத்துத் தன் வாயிலிட்டு மென்று பின் அதனை எடுத்து தாசில்தாரிடம் தந்து அதனை 'மென்று விழுங்குமாறு' கூறியுள்ளார்கள். அதன்படியே தாசில்தாரும் செய்ய அவரது குன்ம நோய் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது.
காமம் கடந்த மகான்:-
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
மற்றுமொரு முறை ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் பட்டுக்கோட்டை கிராமப்புறத்தில் இருந்த மூங்கில் காட்டுக்குள் சென்று அங்கிருந்த நாகபுற்றின் முன் நின்ற சுவாமிகள் தனது ஆண் குறியை வெளியே எடுத்து "நாகம்மா வெளியே வா! இவனுக்குக் காமம் தலைக்கேறி உள்ளது. அதனைக் கட்டுப்படுத்து" என்று அழைக்க, அப் புற்றிலிருந்து பெரிய நாகப்பாம்பு ஒன்று வெளியே வந்து சுவாமிகளின் ஆண்குறியை இரண்டு முறை கொத்தி விட்டுச் சென்றது. பின் அதிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்ற சுவாமிகள் இவ்விதம் தனது காமத்தையும் கட்டுப்படுத்திய மிகப்பெரிய தவசீலர் ஆவார்.
ஜீவ முக்தி:-
🔥💥🔥💥🔥
1873 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகள் தாம் ஜீவசமாதி அடைவதற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திர நாளில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறியவர் தான் கூறிய அதே நாளில் அமர்ந்த நிலையில் சுவாமிகள் ஜீவ முக்தி அடைந்தார்கள்.
குருபூஜை:-
🌸🍃🌸🍃🌸🍃
ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகளின் குருபூஜை இன்று 05.09.2022 ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
சிறந்த சக்திகள் மிகுந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீலஸ்ரீ வெங்கிடு சுப்பையா சுவாமிகளின் அருள் பெறுவோம்.
அமைவிடம்:-
🏵️☘️🏵️☘️🏵️☘️
பட்டுக்கோட்டை நகரில் தஞ்சை சாலையில் சாமியார் மடம் பகுதியில் மார்க்கெட் அருகில் சுவாமிகளில் ஜீவசமாதி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment