தவத்திரு மலையம்மையார்
🔱 புண்ணியம் மிகுந்த பாரத கண்டத்தில் தொண்டை நன்னாடு எனச் சிறப்புற வேலூர் மாவட்டம், குடியேற்றம் தாலுக்கா, காங்குப்பம் கிராமம் சமீபம், மேலைக் கழுக்குன்றம் என மகான்கள் தவம் புரிய மேன்மையான அருள்மிகு மகாதேவ மலையில் மலையம்மையாா் ( ரத்தினத்தம்மா) அவர்கள் 10-ஆண்டுகள் தவம் புரிந்தவா். அம்மையாா் திருச்சி ஸ்ரீ மணிவாசகர் சுவாமிகளின் சீடராவார். ஶ்ரீதேவானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் அம்மையாரின் திருச்சமாதி அமைந்துள்ளது. இடம்:வேலூரிலிருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மகாதேவ மலை அடிவாரம்ஶ்ரீதேவானந்த ஆஸ்ரமத்தில் அம்மையாரின் சமாதி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment