முத்து வடுகநாத சித்தர்
முத்து வடுகநாத சித்தர் என்பவர் சிங்கம்புனரில் ஜீவ சமாதியடைந்த சித்தராவார். இவரைப் பட்டூர் வாத்தியார், வடுகநாத சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவருடைய ஜீவ சமாதியில் உள்ள சிலை, மனிதர்களுக்குப் போல வேர்க்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது.
முத்துவடுகநாதர் ராமநாதபுர சமஸ்தான மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளுக்குப் பிறந்த பூவலத் தேவன் - குமராயி தம்பதியினருக்கு மகனாக கிபி 1737 ஆம் பிறந்தார். பூவலத் தேவன் இறந்தபிறகு, கலகக்காரர்களால் முத்து வடுகநாதரின் உயிருக்கு ஆபத்து வந்தது. இதனை பணியாட்கள் மூலம் அறிந்த குமராயி அங்கிருந்து பாலமேட்டிற்கு குடிபெயர்ந்தார். இளவதிலேயே சித்து வேலைகளை செய்து மக்களிடம் வியப்பினை ஏற்படுத்தினார்.
பட்டூர் குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பட்டூர் அருகேயுள்ள சிங்கம்புனரியில் சூனியக்கார கூட்டமொன்று மற்ற பரிவாரத் தெய்வங்களையும், ஊர் தெய்வங்களையும் கட்டிப்போட்டு மக்களை துன்புருத்தினர். அதனையறிந்த முத்து வடுகநாதர், மாந்திரீக சித்திகளில் வென்று மக்களை காத்தார்.
No comments:
Post a Comment