Sunday, 18 October 2020

அருள் மிகு சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள் 90வது ஆண்டு குரு பூஜை


அருள் மிகு சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள் 90வது ஆண்டு குரு பூஜை  



 

தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த ஸ்வாமிகள் 8ம் ஆண்டு குரு பூஜை

 

தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த ஸ்வாமிகள் 8ம் ஆண்டு குரு பூஜை 







ஸ்ரீல ஸ்ரீ பூண்டி மஹான் ஆற்று ஸ்வாமிகள் 42ம் ஆண்டு மகா குரு பூஜை

ஸ்ரீல ஸ்ரீ பூண்டி மஹான் ஆற்று ஸ்வாமிகள் 42ம் ஆண்டு மகா குரு பூஜை 





42ம் ஆண்டு மகா குரு பூஜை 

Friday, 9 October 2020

ஶ்ரீலஶ்ரீ கோடி சுவாமிகள்

 திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை...

அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போதே அவள் தெய்வத்தின் திருவருளையும் குருவின் பெரும் கருணையையும் நாடியிருக்கிறாள் என்பது தெரிந்தது. கையில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள். அவனுக்கு அதிகபட்சமாக ஆறு வயதிருக்கலாம். அமைதியாக அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் காணவந்த மகான் அப்போது அதிசயமாக உணவு உண்டுகொண்டிருந்தார். அவர் உண்டு யாரும் பார்த்ததில்லை. ஆனால், அன்று ஒரு பக்தர் உணவைக் கொண்டுவந்து அந்த மகானுக்கு உணவை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண் அந்த மகானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். மகான் ஒரு கணம் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் குழந்தையை நோக்கினார்.


``இவனுக்கு ஆறு வயசாயிடுச்சு சாமி. இன்னும் பேச்சு வரலை. பார்க்காத வைத்தியமில்லை. நான் பெட்டிக்கடை வெச்சுதான் பிழைக்கிறேன். இதுக்குமேல வைத்தியம் பண்ண சக்தியில்லை. சாமிதான் மனசிரங்கணும்...'' என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் வழிந்தது. மகான் அவளைக் கருணையோடு ஆசீர்வதித்தார். மாறாக, தனக்கு உணவூட்டிய பக்தனிடம், ``அந்தக் குழந்தைக்கு ஒரு வாய் கொடு'' என்றார். அந்த பக்தரும் அப்படியே செய்தார்.

தனுஷ்கோடி கடல்பூஜை

அவள் மீண்டும் குழந்தையோடு மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு கிளம்பினாள். சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. நடந்துவந்து கொண்டிருக்கும் போது எதிர்ப்புறம் இருந்து ஒரு பேருந்து அவர்கள்மீது மோதுவதுபோல வந்தது. `அம்மா, பஸ்ஸும்மா, ஜாக்கிரதை' என்ற சத்தம் கேட்க அவள் நகர்ந்துகொண்டாள்.

பேருந்து கடந்துபோனதும், யார் அந்தச் சத்தம் கொடுத்தது என்று பார்த்தாள். பின்னால் யாருமே இல்லை. அதுவரை கேட்டிராதது அந்தக் குரல். மகனைப் பார்த்தாள்.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தன் உதடுகள் அசைய, ``அம்மா, நான்தான்மா சத்தம் போட்டேன். எனக்கு இப்போ பேச முடியுதம்மா''என்று சொல்ல அந்தத் தாய் மகான் இருக்கும் திசை நோக்கி விழுந்துவணங்கினாள்.

பேசாத பிள்ளையைப் பேசவைத்த அதிசயத்தைச் செய்த மகான் வேறு யாருமில்லை. அவர்தான் புரவிபாளையம் கோடி சுவாமிகள்.

இந்தப் பாரததேசத்தில் வந்து உதித்த மகான்களில் ஒருவர். தன்னை அறிந்துகொண்டு ஆராதிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை கண்ணை இமைகாப்பதுபோல காத்துவருகிற அற்புதர். குலதெய்வம் எதுவாக இருந்தாலும் அவர்களின் இஷ்ட தெய்வம் கோடி சுவாமிதான்.

தனுஷ்கோடி கடல்பூஜை

கோடி சுவாமிகளின் வரலாற்றைத் தேடிப் புறப்பட்டால், அவர் வயதையும் பிறப்பையும் அறியவே முடியாது.

கோடி சுவாமிகள்... இந்தப் பெயர் எப்படி வந்தது?

“கோடி கோடியான இன்பங்களையும் செல்வங் களையும் பக்தர்களுக்கு வாரி வழங்குவதால் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்’’ என்கிறார்கள். அதற்கேற்றாற்போல் தன்னிடம் வந்து ஆசி பெற காத்திருக்கும் அன்பர்களிடம், ``கோடி வரும்... தேடி வரும்...’’ என்றெல்லாம் சுவாமிகள் சொல்வாராம்.

இந்தப் பெயர் எப்படி வந்தது?

கோடி சுவாமிகளின் இயற்பெயர் என்ன? எப்போது பிறந்தார்? எங்கு பிறந்தார்? இந்த மகானை ஈன்றெடுத்த புண்ணிய தம்பதி யார்? இப்படிப் பல கேள்விகளை சுவாமிகள் இருக்கும்போதே பலரும் அவரிடம் கேட்டார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறு புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்தார் சுவாமிகள்.

தனுஷ்கோடி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் கோயில் மேடையில் ஒற்றைக் கால் ஊன்றித் தவம் செய்ததைப் பல தலைமுறை மீனவர்கள் கண்டிருக்கிறார்கள். அவரைக் கண்டு கடலுக்குச் சென்றால் அது யோகம் என்ற நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. மழையிலும் புயலிலும் வெயிலிலும் அவர் அசையாது நிற்பதைக் கண்டு வியந்திருக்கிறார்கள்.

தனுஷ்கோடி கடல்பூஜை

நடராஜபுரத்தில் வாழும் 75 வயது செல்லதுரை கூறும்போது, ``நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது சுவாமிகளைக் கண்டிருக்கிறேன். என் தாத்தா தன்னோட சிறுவயதிலிருந்தே சுவாமிகள் இப்படி நிற்கிறதைப் பார்த்திருக்கிறதா சொல்லியிருக்கிறார். அவரை யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது. அவரைச் சுற்றி பைரவர்கள் காவலிருப்பார்கள் என்று சொல்வார்'' என்கிறார்.

அப்படியானால் அவர் வயதுதான் என்ன? நூறு என்பார்கள். முன்னூறு என்பார்கள். ஆனால் யாரும் அதை உறுதியாகச் சொல்வதில்லை.

‘ஷீர்டி பாபாவின் மறு அம்சம் இவர்’ என்று கோடி சுவாமிகளைப் பற்றிச் சிலர் சொல்கிறார்கள். ‘வடக்கே இருந்துவந்த கோடி சுவாமிகள், உலகளாவிய விஷயங்களை அறிந்தவர்’ என்பர் சிலர். இவர், கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இந்துஸ்தானியில் சில பாடல்களைப் பாடுவாராம். சில நேரங்களில் ‘ராம ராம’ என்று ஜபிப்பாராம். வள்ளலார், விவேகானந்தர் பற்றி சுவாமிகள் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாராம்!

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைப் பற்றி அடிக்கடி பேசுவாராம். கொல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.

‘தாத்தா சுவாமிகள்’ என்றும் பக்தர்கள், கோடி சுவாமிகளை அழைப்பர். காரணம், சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் ‘தாத்தா... தாத்தா’ என்றே அழைப்பாராம். `வா தாத்தா... காலேஜ் நல்லா படிச்சிட்டிருக்கியா?’ என்று மாணவர்களிடம் கரிசனமாக விசாரிப்பாராம்.

சுவாமிகள் எப்படி இருப்பார்? செக்கச் செவேல் நிறம்; ஒளி வீசும் கண்கள்; சுருக்கங்கள் விழுந்த தேஜஸான முகம்; அதில் தவழும் அமைதி - சாந்தம்; பஞ்சு போன்ற வெண்தாடி; தன்னைத் தேடி வருபவர்களை நல்வழிப்படுத்துகிற ஞானப் பார்வை; குளிருக்கும் சரி; வெயில் காலத்திலும் சரி... ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கோட்டுகளை அணிந்தபடியே இருப்பாராம் சுவாமிகள். இதற்கென்று சுவாமிகளுக்குக் கோட்டு மற்றும் தொப்பிகளை அடிக்கடி அவரின் பக்தர்கள் வாங்கி வந்து தருவது உண்டாம். சில நேரங்களில் தலையைக் கிரீடம் அலங்கரிக்கும்.

ஒரு சிலர் அவரை அணுகிப் பேசுவதுண்டு. தங்கள் இல்லம் வந்து ஆசி வழங்குமாறு கேட்பதுண்டு. அப்படிக் கேட்டவர்களில் சிலரின் இல்லத்துக்குச் சென்று சுவாமி சில நாள்கள் தங்கியிருந்ததாகச் சொல்வார்கள்.

தனுஷ்கோடி வாசத்துக்குப் பின் திருச்சி, பழநி, சென்னை தண்டையார்பேட்டை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் என்று பயணித்து கடைசியாக

1962-ம் ஆண்டு, புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார் சுவாமிகள்.

காரில் வந்து இறங்கிய சுவாமிகள், தானாகவே விறுவிறுவென நடந்து, ஜமீன் வீட்டு மாடிப்படியில் ஏறி, தான் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானித்துக் கொண்டாராம். முற்றிலும் அறிமுகம் இல்லாத ஓர் இடத்துக்கு வந்த சுவாமிகள், இப்படி சகஜமாக நடந்துகொண்டதைக் கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டனர். இதற்கு விளக்கம் தரும் வகையில் பின்னாளில் சுவாமிகளே சொன்ன பதில் இது.

“சுமார் 200 வருடங்களுக்கு முன், புரவிபாளையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கேதான் தங்கினேன். ஜமீனில் உள்ளவர்கள் என்னை நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இங்கு வந்து தங்க நேரிட்டது. புரவிபாளையம் ஜமீனில் இருந்து வந்த சிலர் என்னைக் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் கிளம்பும்போது, ‘நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றேன். அதன்படி புரவிபாளையம் புறப்பட்டேன்.’’

ஶ்ரீலஶ்ரீ கோடி சுவாமிகள்
ஶ்ரீலஶ்ரீ 

கோடி சுவாமிகள் 300 வருடம் இந்த உலகில் வசித்ததாகச் சொல்கின்றனர் சிலர்.

புரவிபாளையம் ஜமீன் இல்லத்து முதல் மாடிதான் சுவாமிகளது வாசம். சமாதி ஆகும்வரை - தான் இங்கே வசித்து வந்த 32 வருடங்களிலும் (1962- 1994) ஒருநாள்கூட படி இறங்கி கீழே வந்ததே இல்லையாம். அதாவது முக்கியமான பக்தர்கள் சிலர், ஜமீன் பங்களாவுக்குள் வந்து சுவாமிகளை தரிசிப்பார்கள்.

அப்போது மாடியில் மேடை ஒன்று அமைத்து, அதில் இருந்தபடி அவர்களுக்கு தரிசனம் தருவார் சுவாமிகள். ``ஏன் சாமீ, நீங்க கீழே வர மாட்டேங்கறீங்க’’ என்று பக்தர்கள் கேட்டபோது, ``நான் கீழே வந்தா உன்னால என்னைப் பார்க்க முடியாது’’ என்பாராம். எந்தப் பொருளில் கோடி சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.

பக்தர்களில் ஏழை - பணக்காரர் எனும் பாகுபாடோ... சாதி - மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்ன பொருளைத் தர எண்ணுகிறாரோ... அதை சம்பந்தப்பட்டவரை நோக்கி வீசிவாராம். இப்படி அவர் எறியும் பொருள்களுள் தொப்பி, பூமாலை, பழங்கள், இனிப்புகள் போன்றவை அடங்கும்.

சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம்; ஆனால், பக்தர்கள் எப்போதேனும் பாட்டிலில் கொண்டுவந்து கொடுக்கும் பன்னீரைக் கடகடவெனக் குடித்து விடுவாராம். அதேபோல் சுவாமிகள், தன் கையால் உணவு சாப்பிட்டு எவரும் பார்த்தது கிடையாது. பக்தர்கள், தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருள்களை அன்புடன் அவருக்கு ஊட்டி விடுவார்களாம். சுவாமிகள் விருப்பப்பட்டால் உணவுக்காக வாயைத் திறப்பார். விருப்பம் இல்லாவிட்டால், ‘வேண்டாம் போ’ என்பதாக சைகை காட்டி விடுவார்.

சுவாமிகள் புரவிபாளையம் ஜமீனில் இருந்த போது நிகழ்த்திய அற்புதங்கள் பல. பலரின் நோய் தீர்த்து துயர் துடைத்து செல்வச் செழிப்பை அருளிய சுவாமிகள் ஏழை எளியவர்கள் மேல் அன்பாக இருந்தார். அவர் செயல்கள் ஒவ்வொன்றும் பிறருக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தன.

இந்த உலகத்தில் மகான்கள் தோன்றுவதும் மறைவதும் அவர்களின் விருப்பத்தோடுதான் நடைபெறும். அப்படித்தான் கோடி சுவாமிகள் பக்தர்களைத் தவிக்கவிட்டு மகா சமாதி கொள்ள முடிவுசெய்தார். 11.10.94 அன்று சுவாமிகள் புரவிபாளையத்திலேயே ஸித்தியடைந்தார்.

11.10.94 அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் மகா சமாதியான சுவாமிகளுக்கு ஜமீன் பங்களாவை ஒட்டியே சமாதி அமைக்கப்பட்டது. சுவாமிகளது சிரசுப் பகுதிக்கு நேராக, சிறு துவாரம் ஒன்று அமைத்து, அதன் மேல் சிறிய சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தனர்.

கண்கள் அறியாவிட்டாலும் வாயு மனிதர் களுக்கு அருள்வதுபோல, சுவாமிகள் மகா சமாதி அடைந்தபின்னும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள்பாலிப்பதை நிறுத்தவில்லை.

சுவாமியின் மகா சமாதிக்கு வந்து வைத்த வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறின. பக்தர்கள் சுவாமி தங்களோடே இருப்பதாக உணரத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் சுவாமிகளின் மகிமையை மேலும் அதிகமாக்கினார் இஞ்சுவாடி கோபால் சுவாமிகள். கோடி சுவாமிகள் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

`தனுஷ்கோடி என்னும் புண்ணிய பூமியில் எனக்குப் பிரியமான அன்னதான சேவையில் பங்குகொள்பவனின் பித்ரு சாபங்கள் அனைத்தையும் நான் போக்குகிறேன்' என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

அதேபோன்று ஸ்தூல உடல் புரவிப் பாளையத் தில் இருந்தாலும் சூட்சுமவுடல் தனுஷ்கோடியில் சஞ்சரிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

சுவாமிகளின் இந்தக் கருத்தினைக்கொண்டு தனுஷ்கோடியில் தற்போது தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த நிலையில்தான் இஞ்சுவாடி கோபால் சுவாமிகள் மூலம் கோடி சுவாமிகள் மற்றுமோர் அற்புதமான வழிபாடு ஒன்றை வெளிப்படுத்தினார். அதுதான் கடல் வழிபாடு.

மாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்துவரும் திருதியை தினம் சுவாமிகளுக்கு உரியது. அன்று தனுஷ்கோடி கடற்கரையில் இந்த கடல்பூஜை நிகழும். அன்றைய தினத்தில் கோடி சுவாமிகளின் பக்தர்கள் ஒன்றுகூட, தனுஷ்கோடியில் யாகங்கள் நடைபெறும். யாகங்கள் முடிந்ததும், கடற்கரையில் படையல் போடுவார்கள்.

தனுஷ்கோடி கடல்பூஜை
தனுஷ்கோடி கடல்பூஜை

தனுஷ்கோடி கடற்கரை வித்தியாசமானது. ஒருபுறம் அலைகள் புரளும். மறுபுறம் அமைதி தவழும். கடற்கரையில் இவர்கள் படையல் போட்டதும், கருடன் வானில் வட்டமிடும். அமைதியான கடல் பகுதியில் ஓர் அலை உருவாகும். அந்த அலை கரைவரை வந்து பக்தர்கள் சிலிர்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கரையில் போட்டிருக்கும் படையலை இலையோடு வாரி எடுத்துக்கொண்டு செல்லும்.

கோடி சுவாமிகளே அலை வடிவாய் வந்து அந்தப் படையலை ஏற்பதாய் ஐதிகம். அனைவரும் கண்களில் நீர் கசிய கலியுகத்தில் நிகழும் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு களிக்கலாம். அந்த அலை அடங்கியதும், மீண்டும் அந்தக் கடல் பகுதி அமைதியாகிவிடும். இது இன்றும் நடக்கும் அதிசயம்.

கோடி சுவாமிகளின் பக்தர்கள் இன்று உலகெங்கும் இருக்கிறார்கள். யார் அவரை மனத்தால் நினைத்து வேண்டிக்கொண்டாலும் உடனே அவர் அருள் செய்கிறார். வேண்டிய அனைத்தையும் தருகிறார்.

அப்படிப்பட்ட சுவாமிகளுக்குச் சென்னையில் ஓர் ஆலயம் எடுக்க வேண்டும் என்பது அவர் பக்தர்களின் தீராத ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது. கடந்த 8.3.2020 அன்று சென்னை பெருங்குடியில் கும்பாபிஷேகம் - ஶ்ரீலஶ்ரீ பொன்முடி கோடி சுவாமிகளின் கலசம் நிறுத்தும் விழா கோலாகலமாக நடந்தேறியது.


வாய்ப்பிருக்கும் பக்தர்கள் கலந்துகொண்டு கோடி சுவாமிகளின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.

பிரம்மஶ்ரீ சித்தயோகி சாமய்யா சுவாமிகள்

 


பிரம்மஶ்ரீ சித்தயோகி சாமய்யா சுவாமிகளின்128-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 87-ம் ஆண்டு பரிபூரணமான நாள் 15.08.2020, சனிக்கிழமை

வரலாறு:

கோவை மாநகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பன்னிமடை (​பண்ணீர்மடை​) என்ற கிராமம். இங்கு 1892 ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தவர் யோகி சாமய்யா. சிறுவயதிலேயே அளவற்ற பக்தி செய்து வாழ்ந்தார் யோகி சாமய்யா.* *தனது பனிரெண்டாவது வயதில் தவம் செய்யத் துவங்கினார்​. தவம் செய்தால் உலக வாழ்க்கையில் பற்று இல்லாமல் போய்விடும்* *என்று எண்ணிய அவர் பெற்றோர்கள்​. இளம்வயதிலேயே தம் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினார்கள்​. பிறகு திருமணம் செய்து வைத்தார்கள்​.* *இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்ட சிறிது காலத்தில் உலக மயக்கம் என்ற கண்ணாடித்திரை விலகியது. தன் பிறவியின் நோக்கம் நினைவிற்கு வந்தது.*

*1929-இல் இவரை சந்தித்த சைவ சமய யோகி "நீ பெரிய மகானாவாய்; சமாதி நிலை அடைவாய்", என வாழ்த்திச்சென்றார்​. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தன் இமாலய யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த சித்த யோகத்தின் தந்தை சுவாமி சிவானந்த பரமஹம்சரை சந்தித்து முறைப்படி உபதேசம்* *பெற்றார். அதை தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.*

*அன்றைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த கவர்னர் ஜெனரல் 'எர்வின் ' கோவையில் நகர்வலம் வந்தார். அப்போது யோகி சாமய்யா* *சாலையை கடக்க குறுக்கே சென்று விட்டார். கோபம் கொண்ட ஜெனரல் "அந்த பிச்சைக்காரனை அப்புறப்படுத்துங்கள்​" என்று ஆணையிட்டார்​. தன்னை அகற்ற வந்தவர்களை நோக்கி "நில்" என சைகை செய்தார்.* *அவர்கள் உட்பட குதிரைகளும் நகரமுடியாமல் நின்றுவிட்டன​. அவர் மகிமை உணர்ந்த ஜெனரல் மன்னிப்புக் கோரிய பின்பே வண்டி நகர்ந்தது.*

*மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார்​. அச்சமயம் யோகி சாமய்யாவை சந்தித்து. "​இந்தியாவிற்கு சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும்​?" என்று கேட்டார்கள். அதற்கு யோகி சாமய்யா, "நான் ஜீவ சமாதி சென்று பத்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும்", என்றார்.*

*அதேபோன்று யோகி சாமய்யா மகாசமாதி நிலை அடைவதை மூன்று*
*மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டு 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள், உற்றார், உறவினர், ஊரார் முன்னிலையில் தன் தங்கையை அழைத்து தான் ஜீவ சமாதி அடையக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கூறி தனது தங்கையின் மடியில் அவரது தலையை வைத்தார், பிறகு இரு கண்களும் கற கற வென சுற்றி நின்று ஜீவ சமாதியில் ஆழ்ந்தார்! ஆனால் சமாதியின் முறை அறியாத கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அவரை சாதாரணமாக மண்ணில் புதைத்து விட்டனர்.*

*மலேசிய பயணத்திலிருந்த அவருடைய குரு சிவானந்த பரமஹம்சருக்கு ஞான திருஸ்டியில் இது தெரியவர, தம் பயணத்தை முடித்துக்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவை பன்னிமடை வந்து மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த யோகி சாமய்யாவின் உடலை வெளியே ஏ டுத்தார்கள்​ உடல் கெடாமல்* *வெதுவெதுப்பாக இருந்தது அவர்* *மீது குருவின்* *கைகள் பட்ட* *உடனேயே * *யோகி சாமய்யாவின்* *கண்களிலி* *ருந்து நீர் தாரைதாரையாகச் சொறிவதை கண்ட மக்கள் * *மகாசமாதியின்* *மகத்துவத்தைக்க* *ண்டு வியந்தனர்.* *பின்பு யோகி* *சாமய்யாவின்* *விருப்பப்படியே* *குருவின் கைகளாலேயே* *அவருக்கு முறைப்படி சமாதி வைக்கப்பட்டது​!அவருடைய குரு* *பூஜை ஆண்டுதோறும் சுதந்திரதின* *மான ஆகஸ்ட் 15-ல் நடைபெற்று வருகிறது.*

*அவருடைய கணிப்புத்தவறாமல் சமாதி அடைந்து பத்து ஆண்டுகள் கழித்து அதே நாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமத்ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்ரீ ஓத ஸ்வாமிகள் 115வது மகா குரு பூஜை

 ஸ்ரீமத்ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்ரீ ஓத ஸ்வாமிகள் 115வது  மகா குரு பூஜை 


 

ஸ்ரீலஸ்ரீ குருநாதர் மானூர் ஸ்வாமிகளின் 76ம் ஆண்டு மகா குரு பூஜை

ஸ்ரீலஸ்ரீ குருநாதர் மானூர் ஸ்வாமிகளின் 76ம் ஆண்டு மகா குரு பூஜை








ஸ்ரீலஸ்ரீ சண்முகத்தடிமை அருள்மிகு ஸ்ரீ வேலு ஸ்வாமிகள் 26ம் ஆண்டு குரு பூஜை

         ஸ்ரீலஸ்ரீ சண்முகத்தடிமை அருள்மிகு ஸ்ரீ வேலு ஸ்வாமிகள் 26ம் ஆண்டு குரு பூஜை 



Wednesday, 30 September 2020

ஸ்ரீ சாது கருணாம்பிகை தேவி

 ஸ்ரீ சாது கருணாம்பிகை  தேவி


🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️

     இறைத் தத்துவத்தை உணர பக்தியில் பலவகைகள் உண்டு. சிரவணம்,கீர்த்தனம்,  ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம்,தாஸ்யம், சினேகம், ஆத்ம நிவேதனம் என்னும் சரணாகதி. பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே. எண்ணற்ற மானுடர்களில் ஆண், பெண் பேதமின்றி இறைவனை சென்றடையும் ஆத்மா ஒன்றே.

    பெண் சித்தர்களுள் ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்கள். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று,இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.                              அருளன்னை ஸ்ரீசாரதா தேவி, பக்த மீரா, ஸ்ரீஅன்னை, அக்கா மகாதேவி, மாயம்மா, சர்க்கரை அம்மாள், அம்மணியம்மாள் கரூர் பாட்டி சித்தர் என இன்னும் நம்மால் அறியப்படாத மாந்தருள் தெய்வங்களானோர்  பலருண்டு

மதுரையில் முத்து

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    மீனாட்சி அம்மையின் அருளாட்சி  நடைபெறும் மதுரையம்பதியில் தியாகராஜர் பிள்ளை - ஞானாம்பாள் தம்பதியருக்கு 1930 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி அம்மைநாயக்கனூரில் ஸ்ரீகருணாம்பிகை அம்மை அவதரித்தார்

   அக்காலத்தில் பெரிதாய் பள்ளி சென்று அதிகம் படிக்காவிடினும், இளமை முதலே இறை நாட்டத்தில் ஆர்வம் கொண்டு வள்ளல் பெருமானை தன் மனத்துள் குருவென இருத்தி அருட்பெரும் ஜோதியை தியானித்து வரலானார்.

வழக்குரைத்த வனிதை:-

🍁🍁🍁🍁🍁🍁🍁

   அக்கால வழக்கப்படி அம்மையின் 14ம் வயதிலேயே பெற்றோர் அவருக்கு மணம் முடிக்க வேண்டி அம்மையை வற்புறுத்தினர். இருப்பினும், இல்வாழ்வை வெறுத்த நிலையில் இருந்த கருணாம்பிகை அம்மையாரோ  குடும்ப நண்பர் ஒருவரின் அடைக்கலத்தைப் பெற்று, அக்கால கட்டத்திலேயே பெண்ணுரிமை கோரி வழக்காடு மன்றத்தை நாடினார். வழக்கின் தீர்ப்பும் அம்மையாருக்கு சாதகமாகவே அடைக்கலம் அளித்தவரின் ஆதரவோடு தம் துறவு வாழ்வைத் தொடங்கினார்

நிலவறையில் நிஷ்டை:-

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    திண்டுக்கல்லில் 1956ல் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு ஒரு நிலவறையை ஏற்படுத்தி, அதனுள் 18 மாதங்கள் கடும் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவயோகி ஆனார். காருண்யம்

🏵️🏵️🏵️🏵️🏵️

  இளம்தவசியை நாடித் தம் குறைகளை போக்கிக் கொள்ள அடியவர்கள் வரத்தொடங்கினர். தம்மை நாடி வந்த அடியவர்களின் குறைகளையும்,துன்ப துயரங்களையும் அருளாளரான ஸ்ரீ கருணாம்பிகை  அம்மையார் கருணைகொண்டுபோக்கி வந்தார்

முக்தி நிலை:-

🍀🍀🍀🍀🍀🍀

    ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை அடியவர்களிடம் முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன்படி  1970ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ரேவதி நட்சத்திரத்தில் தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனமாய் அர்ப்பணித்துத் தன் ஜீவனை இறைவனின் திருவடிகளில் சரணாகதி அடையச் செய்தார்.

ஜீவசமாதி அமைவிடம்:-

💥💥💥💥💥💥💥

    திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமத்தில் அம்மையாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. ஸ்ரீ கருணானந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

  நாமும் ஒருமுறை அம்மையாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து ஸ்ரீ கருணாம்பிகையின் காருண்யத்தைப் பெற்றிடுவோம்.

🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹

        கட்டுரை புனைவு :-

           அகிலா குமார்,

                  ஈரோடு.

கட்டுரை கருத்தாக்கம் :-

🌎சித்தர் தேசம்

Tuesday, 29 September 2020

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகள்





இன்று 30.09.2020 புதன்கிழமை குருபூஜை:-

ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகள்💥

🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️

    ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த நாராயணசாமி ரெட்டி என்னும் இயற்பெயர் கொண்டவரான சுவாமிகள் தேச சஞ்சாரம் செய்து இறுதியாக தமிழகத்தில் பொள்ளாச்சியை வந்தடைந்தவர் அங்கு பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார்.

அற்புதம்:-

🍁🍁🍁🍁🍁

    பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகில் 30 வருடங்களாகத் தங்கி தவம் இயற்றி வந்தார். அப்போது சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், வெயில், மழை,காற்று போன்ற இயற்கை மாற்றங்களாலும் எவ்வித பாதிப்புமின்றி  சலனமற்று வீற்றிருந்தார். பலர் அவரை சராசரி பிச்சைக்காரன் அல்லது பைத்தியக்காரன் என்று நினைத்து வந்தனர். ஒரு சமயம் கன மழை பெய்த போது அவர் தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் சுமார் 30 அடி நீளத்திற்கு மேற்பட்ட சுற்று சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், சுவாமிகள் தங்கியிருந்த பாகம் தவிர மற்றவையெல்லாம் சிதிலமடைந்தது. இதனைக் கண்ட மக்கள் சுவாமிகள் சாதாரண மனிதர் அல்ல என்று உணர்ந்து அவரை அணுகி ஆசி பெற்றனர்.

ரண்டி,ரண்டி:-

🍀🍀🍀🍀🍀🍀

   சுவாமிகள் தம்மை நாடி வருபவர்கள் அனைவரையும் அன்போடும், வாஞ்சையோடும் ரண்டி,ரண்டி என்று தெலுங்கில் வரவேற்பார். அதனாலேயே சுவாமிகளை அவரது பக்தர்கள் 'ரெண்டி சுவாமிகள்' என்று குறிப்பிட்டு அழைத்தனர்.

தீர்த்தம்:-

🌺🌺🌺🌺

   ரெண்டி சுவாமிகள் பொள்ளாச்சியில் உள்ள மலைகள், காடுகள் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்து சில அபூர்வ மூலிகைகளைக் கண்ணாடி பாட்டில்களில் சேகரிப்பார்.அம் மூலிகைகளைக் கொண்டு மக்களின் பிணிகளைத் தீர்த்து வந்தார்.

   அதுமட்டுமின்றி ரெண்டி சுவாமிகள் தம்மை நாடி வரும்  நோயாளிகளைத் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதனை மந்திரித்து அவர்களிடம் தருவார். அந்தத் தண்ணீர்   நறுமணமிக்க புனித நீராக மாற்றம் பெற்றிருக்கும். அப்புனித நீரே நோயாளிகளைக் குணப்படுத்தும் அருமருந்தாக மாறி இருக்கும். இவ்விதம்  குணமடைந்தவர்கள்  ஏராளம்.

குருவும்,சீடரும்:-

🌸🌸🌸🌸🌸🌸

   சுவாமிகள்  பொள்ளாச்சி ஆனைமலையில் வேட்டைக்காரன் புதூரில் உள்ள திருவார்திரு அழுக்கு சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு அடிக்கடி சென்று  தியானத்தில் ஈடுபடலானார்.

        ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சுவாமிகளைக் குருவென மனதில் எண்ணித் தொடர்ந்து ஆழ்நிலைத் தவமியற்றி 'பரவச நிலை'யை அடைந்தார். பின்னர் பொள்ளாச்சியில் 12 ஆண்டு காலம் தவம் மேற்கொண்டு 'மஹாசமாதி நிலை'யில் ஆனைமலை சத்யேந்திர சித்தர் பீடத்திற்கு வந்தடைந்தார்.

ஜீவ முக்தி:-

🌻🌻🌻🌻🌻

   2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியன்று ரெண்டி சுவாமிகள் தன் ஜீவனை பரமாத்மாவுடன் இணைத்துக் கொண்டார்.   சுவாமிகளின் பூத உடலை அவரது பக்தர்கள் ஒரு பல்லக்கில் வைத்து  சுமந்தபடி கோவை - ஒத்தகால் மண்டபத்தில் உள்ள ஸ்ரீசித்தேந்திர சித்தர் பீடத்தில் சமாதி வைக்க முடிவு செய்து எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்படவே ஆனைமலை பெருமாள் சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ "சத்தியேந்திர சித்தர் பீடத்தில்" சுவாமிகளின் திருமேனியை சமாதி செய்ய ஏற்பாடு செய்து நிலத்தைத் தோண்டிய போது அதிலிருந்து ஒரு அபூர்வ வெள்ளை நாகம் வெளிப்பட்டு அருகே இருந்த மரத்தடியில் படமெடுத்து நின்றது.    சுவாமிகளை சமாதி வைத்த பின்னரே அது நகர்ந்து சென்றது. சுவாமிகளே நாக வடிவில் சூட்சுமமாக வந்து சென்றதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். இன்றும் சுவாமிகள் அவரது பக்தர்களுக்கு நாக ரூபத்தில் காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார். சுவாமிகள் சமாதி அடைந்த பின்னரும் கூட பல பக்தர்கள் ரெண்டி சுவாமிகளை பெருமாள் சுவாமி மலைச்சாரலில் பல முறை தரிசனம் செய்துள்ளனர்.

குருபூஜை :-

🏵️🏵️🏵️🏵️🏵️

  ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள பெருமாள் சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சத்தியேந்திர சித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீரெண்டி சுவாமி சித்தர் மஹா சமாதியில் குருபூஜை, 'பரிசுத்த வழிபாட்டு முறைப்படி' வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

   அதன்படி இன்று 30. 09. 2020 புதன்கிழமை  ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகளின் 8ம் ஆண்டு குருபூஜை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், அதன் பின்பு மகா அன்னதானமும் நடைபெறும்.


 நாமும் ஸ்ரீலஸ்ரீ ரெண்டி சுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்திப்போம்

     கட்டுரை புனைவு:-

        அகிலா குமார்,

                ஈரோடு.

கட்டுரை கருத்தாக்கம்:-

🌎(சித்தர் தேசம்)

Thursday, 13 February 2020

ஓம் ஸ்ரீ திருப்பூர் மௌன சித்தர் மகா சமாதி குரு பூஜை

ஓம் ஸ்ரீ திருப்பூர் மௌன சித்தர் மகா சமாதி குரு பூஜை அழைப்பிதழ் 





முக்கிய குறிப்பு:

நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி, பண உதவி, நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு  நல்லது.

Friday, 31 January 2020

சிவ ஸ்ரீ கேதார சித்தர் பீடம்








அமைவிடம் 

சிவ ஸ்ரீ கேதார சித்தர் பீடம், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் அருகில், சிறிய விநாயகர் கோயில் பக்கத்தில் கேதார சித்தரின் சமாதி பீடம் அமைந்துள்ளது. 


குறிப்பு:

நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி , நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு  நல்லது. 

நவ கண்ட யோக சித்தர் ஸ்ரீ முத்து குமார ஸ்வாமி








அமைவிடம்:
அவிநாசியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் சேவூர் உள்ளது. சேவூரிலிருந்து மெயின் ரோடு திரும்பியதும் வலது கை  பக்கம் நவ கண்ட யோக சித்தர் ஸ்ரீ முத்து குமார ஸ்வாமிகளின் சக்தி மிகுந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது.(சேவூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவு)

குறிப்பு:

நாம் எந்த ஜீவ சமாதிக்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று அவர்களின் அருளை வாங்குவதை தவிர்க்கவும். நம்மால் இயன்ற நம் வருமானத்திற்கு உட்பட்ட பொருளுதவி , நன்கொடை செய்து வருவது தான் அவரவர்க்கு  நல்லது.