Thursday, 31 January 2019

ஸ்ரீ மிளகாய் பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி


Image may contain: outdoor



ஸ்ரீ மிளகாய்  பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை
மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி 

நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..
85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் இங்கு பூஜைகள் செய்கிறார்கள் 
சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்கள் .. இப்போதும் சுவாமிகள் இங்கு தேகத்துடன் உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி..சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்...

மிளகாய் பழம் மற்றும் வற்றல்ளே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.. அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்..
பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது..
திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..
ஒரு முறை தரிசனம் செய்யுங்கள் ஆனந்தமாக வாழுங்கள் ...
ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
ஆறுமுக நகர்..
கிரிவல பாதை ..
கழுகு மலை

No comments:

Post a Comment