நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Friday, 16 November 2018
Monday, 29 October 2018
பாய் சித்தர்

திண்டுக்கல் நகரில் வாழ்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கிய 'பாய் சித்தர்" அவர்கள் மஹாசமாதி நத்தம் ரோடு வடகாட்டு பட்டி சாய்பாபா திருக்கோவில் வளாகத்தில் உள்ளது.
பிரம்ம ஸ்ரீ விபூதி சித்தர் திருப்பூர்

அமைவிடம் :
ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம் (po ), பல்லடம் வழி, திருப்பூர்
Tuesday, 17 April 2018
கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்..
அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .
திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.
அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .
துண்டைக் கயிறாக்கியவர்
தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.
அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.
இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .
சொன்ன நாளில் சமாதி
ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .
சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .
அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.
“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”
“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”
என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்
ஶ்ரீ ல ஶ்ரீ பிள்ளையார் சித்தர் ஜீவ ஆலயம்
ஶ்ரீ ல ஶ்ரீ அழுக்குச்சித்தர் சுவாமிகளின் நேரடி சீடர் ஶ்ரீ ல ஶ்ரீ பிள்ளையார் சித்தர்
( ஶ்ரீ ல ஶ்ரீ பிள்ளையார் சித்தர் ஜீவ ஆலயம், ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில், ஆனைமலை. ( ஆனைமலை ஶ்ரீ மாசானியம்மன் திருக்கோவில் அருகில்) பொள்ளாச்சி அருகே, தமிழ்நாடு, இந்தியா )
ஏரல் சேர்மன் அருணாச்சலசுவாமிகள்
திருச்செந்தூர் அருகில் மேலப் புதுக்குடி
கிராமத்தில் 1880 அப்டோபர் 2ம் நாள்
ராமசாமி நாடார், சிவணைந்த
அம்மையார் அவர்களுக்கு சேர்மன்
அருணாசல சுவாமி பிறந்தார் . அருகில்
உள்ள கிராமத்தில் ஆரம்பக் கல்வி
பயின்றார். சிறுவயதிலேயே யோகக்கலை
பயின்றார். பின் திருவைகுண்டம் தாலுகா
ஏரல் மாநகரில் ஆரம்பக்கல்வி
பயின்றார். அங்கும் அவர் மவுன விரதம்
இருந்து பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து
வந்ததால் நாளடைவில் பிரபலமானார்.
அவரைக் காண பொது மக்கள்
திரள ஆரம்பித்தனர். அப்படி தன்னைக்
காண வரும் மக்களுக்கும், நோய்
வாய்ப்பட்டவர்களுக்கும் வைத்திய
தொழில் செய்து வந்த தனது
குடும்பத்தின் பரம்பரை வழக்கப்படி சலக
நோய்களையும் குணப்படுத்தினார்.சாதி மதம்
பாராமல் அனைத்து சமூக மக்களுக்கும்
தொண்டாற்றினார் அருனாசல
சுவாமிகள்.
அவரது நீதியும் நேர்மையும் அவருக்கு மிகுந்த
செல்வாக்கை ஏற்படுத்திக்
கொடுத்தது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிண
ங்க 1906 செப்டம்பர் மாதம் 5ந்தேதி
முதல் 1908 ஜூலை மாதம் 27ந்தேதி வரை ஏரல்
பஞ்சாயத்து போர்டு சேர்மனாகப்
பணியாற்றினார். அதாவது அவரது 26ம்
வயதிலேயே சேர்மனானார். இப்பணியை
சிறப்பாக செய்ததால் சேர்மன் என்ற
பெயர் பெற்றார். சேர்மன்
சுவாமி ஒரு நாள் தன் இளைய சகோதரர்
கருத்தபாண்டி நாடாரை அருகில் அமர்த்தி
பல ஆசிகள் கூறி நான் ஒரு வாரத்தில்
(கலக வருடம் 1083ம் ஆண்டு) 1908 ஆண்டு
ஆடி மாதம் 13ந்தேதி (ஜூலை மாதம் 28ம்
தேதி) செவ்வாய்கிழமை ஆடி
அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு
இறைவன் திருவருடியில் சரணடைவேன் என்று
கூறினார்.
ஏரலுக்கு தென்மேற்கில் இயற்கை எழில்
கொஞ்சும் தாமரபரணி ஆற்றின்
கரையோரம் ஆலமரத்தின் அருகில் என்னை
சமாதி செய்ய வேண்டும். சமாதி
குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அந்த
நேரத்தில் மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும்.
கருடனின் நிழல் என் மேல் விழும்போது சமாதி
குழியை மண்ணும் மலர்களுமாக சேர்ந்து
மூடிவிடுங்கள் என்று கூறினார்.
சேர்மன் சுவாமிகள் சமாதி ஆகும் போது
வயது 28! திருமணம் ஆகாமலேயே சமாதி
ஆனார். அவர் சொன்ன
வாக்கின்படியே நடந்தது. அன்று முதல்
வற்றாத தாமிரபரணி ஆற்றின் வலது
கரையில் ஆலமரத்தின் ஓரமாக சமாதி
கொண்டார். இங்கு அவரை த்ரிசிக்க
வரும் பக்தர்களுக்கு மண்ணும், தண்ணீரும்
திருமருந்தாக கொடுக்கப்படுகிறது.
அருணாசல சுவாமியை வழிபட வரும்
பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து
விட்டு ஈரஉடையோடு வலம் வந்து,
கொண்டு வரும் புனித நீரை
லிங்கத்துக்கு அபிஷேகமாக ஊற்றுகின்ற
வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணால் செய்த
லிங்கம் கரைந்து விடுமென்று கருதி
கல்லில் லிங்கம் செய்து வைக்க வேண்டும்
என் பக்தர்கள் நினைத்தார்கள். ஆனால்
மண்ணால் செய்து வைத்த லிங்கம்
புனித நீரை ஊற்ற ஊற்ற கரைவதற்கு
பதிலாக வளர்ந்து கொண்டு
வருவதாக ஐதீகம் உண்டு.
இதனால் இன்றும் மண்லிங்கமே
மூலஸ்தானமாக விளங்குகிறது. இது
சுயம்பாக அமைந்த லிங்கமாகும். ஏரல்
சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை
நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து
அருளாசி வழங்கி வருகிறார் என்கிற
நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான
பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக மன நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி
குணமடைந்து செல்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)